Top Story
இலங்கையின் வரலாற்றில் மற்றுமொரு மிகக் கொடூரமான நாளாக நினைவுகூரப்படும் தினம் இன்றாகும்.

2019ஆம் ஆண்டு இதேபோன்றதொரு நாளில், உயிர்த்த ஞாயிறு தினத்தில், நாட்டின் பல பகுதிகளில் ஒரே நேரத்தில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் உலகையே அதிர்ச்சியடையச் செய்தன.

இந்த தாக்குதல்கள் தலைநகர் கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் உள்ள தேவாலயங்களையும், ஐந்து நட்சத்திர விருந்தகங்களையும் குறிவைத்து நடத்தப்பட்டன.

ஆறு முக்கிய இடங்களில் நிகழ்ந்த இந்த வெடிப்புகளில் சுமார் 269 பேர் உயிரிழந்தனர், 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் .

நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபாஸ்டியன் தேவாலயத்தில் மாத்திரம் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலில் பல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதல்களுக்கு பின்னர், தீவிரவாத குழுவாக கருதப்படும் உள்ளூர் அமைப்பு மற்றும் சர்வதேச தீவிரவாத இணைப்புகள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு இதுவரையிலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், அப்பாவி இறை விசுவாசிகளின் நீதிக்கான போராட்டம் 07 ஆண்டுகளாக தொடர்கிறது.

இந்த நாளை முன்னிட்டு, நாடு முழுவதும் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

காலை 8:45 மணிக்கு இரண்டு நிமிட மௌனம் கடைப்பிடித்து, உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட வேண்டும் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசேட ஆராதனைகளின் பிரதான நிகழ்வு, கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு, கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை அண்மித்த வீதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.

இதன்படி, இன்று காலை 07 மணி முதல் நினைவேந்தல் நிகழ்வுகள் நிறைவடையும் வரை குறித்த பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னிட்டு தேவாலயத்தைச் சூழ பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
விபரங்களுக்கு
General21 April 2026
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் 7ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று
International News

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்

International 21 April 2026
தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்

இயேசு கிறிஸ்துவின் சிலை சேதமாக்கப்பட்டமைக்கு நெதன்யாகு கடும் கண்டனம்

International 20 April 2026
இயேசு கிறிஸ்துவின் சிலை சேதமாக்கப்பட்டமைக்கு நெதன்யாகு கடும் கண்டனம்

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் மாணவர்கள் போராட்டம்!

International 20 April 2026
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் மாணவர்கள் போராட்டம்!

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

International 18 April 2026
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

செவ்வாய் கிரகத்தில் உயிர் பிழைக்க முடியுமா? வியக்க வைக்கும் புதிய ஆய்வு!

International 16 April 2026
செவ்வாய் கிரகத்தில் உயிர் பிழைக்க முடியுமா? வியக்க வைக்கும் புதிய ஆய்வு!

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை? அடுத்தகட்ட நகர்வு குறித்து ஈரான் இன்று அறிவிக்கும்

International 16 April 2026
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை? அடுத்தகட்ட நகர்வு குறித்து ஈரான் இன்று அறிவிக்கும்

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை கூட்டம்: லெபனான் போர்நிறுத்தம் குறித்து ஆலோசனை

International 16 April 2026
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை கூட்டம்: லெபனான் போர்நிறுத்தம் குறித்து ஆலோசனை

ஈரானுடன் பேச்சு: அமெரிக்க வெள்ளை மாளிகையின் நம்பிக்கை

International 16 April 2026
ஈரானுடன் பேச்சு: அமெரிக்க வெள்ளை மாளிகையின் நம்பிக்கை

முதலிரவு அறையில் ரூ.90 லட்சம் கேட்டு மணமகள் ரகளை!

International 15 April 2026
முதலிரவு அறையில் ரூ.90 லட்சம் கேட்டு மணமகள் ரகளை!

அந்தாட்டிக்காவின் ‘ஆபத்தான வலயத்தில்’ புதிய தீவு கண்டுபிடிப்பு!

International 13 April 2026
அந்தாட்டிக்காவின் ‘ஆபத்தான வலயத்தில்’ புதிய தீவு கண்டுபிடிப்பு!

அமெரிக்காவின் முற்றுகை அறிவிப்புக்கு மத்தியில் ஹோர்முஸை கடந்த ஈரானிய கப்பல்கள்!

International 13 April 2026
அமெரிக்காவின் முற்றுகை அறிவிப்புக்கு மத்தியில் ஹோர்முஸை கடந்த ஈரானிய கப்பல்கள்!

மேத்யூ பெர்ரி மரண வழக்கு: 'கெட்டமைன் ராணிக்கு' 15 ஆண்டுகள் சிறை!

International 09 April 2026
மேத்யூ பெர்ரி மரண வழக்கு: 'கெட்டமைன் ராணிக்கு' 15 ஆண்டுகள் சிறை!

பக்தாத்தில் கடத்தப்பட்ட அமெரிக்க ஊடகவியலாளர் விடுதலை!

International 08 April 2026
பக்தாத்தில் கடத்தப்பட்ட அமெரிக்க ஊடகவியலாளர் விடுதலை!

சாத்தான்குளம் படுகொலை வழக்கு: 9 காவல்துறையினருக்கு மரண தண்டனை!

International 06 April 2026
சாத்தான்குளம் படுகொலை வழக்கு: 9 காவல்துறையினருக்கு மரண தண்டனை!

மத்தியஸ்தர்களின் போர் நிறுத்த முன்மொழிவுகளுக்கு ஈரானின் பதில் தயார்!

International 06 April 2026
மத்தியஸ்தர்களின் போர் நிறுத்த முன்மொழிவுகளுக்கு ஈரானின் பதில் தயார்!
More News
General21 April 2026

இஸ்லாமாபாத் அமைதிப் பேச்சுவார்த்தை: அமெரிக்கா - ஈரான் இடையே நீடிக்கும் இழுபறி

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் நடைபெறவுள்ள அடுத்த சுற்று அமைதிப் பேச்சுவார்த்தையில் அமெரிக்காவும் ஈரானும் பங்கேற்குமா என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில், ஈரானுடனான ஒப்பந்தம் "மிக விரைவாக" எட்டப்படும் என்றும், அது முந்தைய ஒப்பந்தங்களை விட "மிகச்சிறந்ததாக" இருக்கும் என்றும் பதிவிட்டுள்ளார். மேலும், ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை அந்த நாட்டை "முற்றாக அழித்து வருவதாகவும்", ஒப்பந்தம் எட்டப்படும் வரை இந்த முற்றுகை நீக்கப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணை தொடர்பான கருத்து வேறுபாடுகள் மற்றும் ஈரான் கப்பலை அமெரிக்கா கைப்பற்றிய விவகாரத்தால், ஈரான் இந்தப் பேச்சுவார்த்தையிலிருந்து கடைசி நேரத்தில் விலகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரானின் 'காதம் அல்-அன்பியா' (Khatam al-Anbiya) இராணுவ தலைமையகம், கப்பல் கைப்பற்றப்பட்டமை போர்நிறுத்தத்தை மீறும் செயல் என்றும், இதற்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்றும் சபதம் செய்துள்ளது. ஈரானிய வெளிவிவகார அமைச்சின் ஊடகப்பேச்சாளர், "இதுவரை அடுத்த சுற்று பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் திட்டம் எதுவும் இல்லை" என்று கூறியுள்ளார். அமெரிக்கத் தரப்பிலும் தெளிவற்ற தகவல்களே வெளிவருகின்றன. அமெரிக்கத் தூதுக்குழு ஏற்கனவே புறப்பட்டுவிட்டதாக முன்னர் செய்திகள் வெளியான போதிலும், அவர்கள் இன்னும் புறப்படவில்லை என்றும், "விரைவில்" புறப்படுவார்கள் என்றும் பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையிலான 10 நாள் தற்காலிக போர்நிறுத்தம் மிகவும் பலவீனமான நிலையில் உள்ளது. இருப்பினும், இரு நாடுகளுக்கும் இடையிலான தூதுவர் மட்டத்திலான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறும் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. 

விபரங்களுக்கு
இஸ்லாமாபாத் அமைதிப் பேச்சுவார்த்தை: அமெரிக்கா - ஈரான் இடையே நீடிக்கும் இழுபறி
General21 April 2026

ஈரான் மீதான கடல்சார் முற்றுகை - டொனால்ட் ட்ரம்ப்பின் புதிய அறிவிப்பு

ஈரானுடன் ஒரு முறையான ஒப்பந்தம் எட்டப்படும் வரை, அந்த நாட்டின் துறைமுகங்கள் மீதான கடல்சார் முற்றுகை நீக்கப்படாது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.   இது குறித்து தனது 'ட்ரூத் சோஷியல்” தளத்தில் அவர் வெளியிட்ட பதிவுகளில், இந்த முற்றுகை ஈரானை பொருளாதார ரீதியாகப் பெரிதும் பாதித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஈரானுடன் ஒரு இறுதி 'ஒப்பந்தம்' ஏற்படும் வரை முற்றுகை முழுமையாக அமுலில் இருக்கும் என்று ட்ரம்ப் கூறியுள்ளார். இந்த முற்றுகையினால் ஈரான் ஒரு நாளைக்கு 500 மில்லியன் டொலர்களை இழந்து வருவதாகவும், இது குறுகிய காலத்திற்குக் கூட தாங்கிக்கொள்ள முடியாத ஒரு தொகை என்றும் அவர் வாதிட்டுள்ளார். ஏப்ரல் 13 முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள இந்த முற்றுகை, ஈரான் தனது அணுசக்தி திட்டம் மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தி விவகாரங்களில் அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு உடன்பட வைக்கும் ஒரு அழுத்த உத்தியாகப் பார்க்கப்படுகிறது. ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடுவதாக ஈரான் எச்சரித்துள்ள நிலையிலும், ட்ரம்ப் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார். இந்தநிலையில், ஈரான் துறைமுகங்களுக்குள் நுழையும் மற்றும் வெளியேறும் கப்பல்களைக் கட்டுப்படுத்தும் பணியில் அமெரிக்கக் கடற்படையின் மத்திய கட்டளையகம் ஈடுபட்டுள்ளது.

விபரங்களுக்கு
ஈரான் மீதான கடல்சார் முற்றுகை - டொனால்ட் ட்ரம்ப்பின் புதிய அறிவிப்பு
General21 April 2026

இன்று முதல் புதிய பேருந்து சேவை

மாற்றுத்திறனாளிகளின் நலன்கருதி, பிரத்யேக வசதிகளுடன் கூடிய குறைந்த தள முன்னுரிமை பேருந்து சேவையானது இன்று (21) மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மையத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது. Clean Sri Lanka திட்டத்தின் கீழ் இதற்கு 430 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துவோர் எளிதாக ஏறி இறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட 10 நவீன குளிரூட்டப்பட்ட பேருந்துகள் முதற்கட்டமாக சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. ஒரு பேருந்தில் ஒரே நேரத்தில் 80 பயணிகள் வரை பயணிக்க முடியும். இதில் 33 இருக்கைகள் உள்ளன. அத்துடன், மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் விசேட பாதுகாப்பு அம்சங்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. மாகும்பூரவில் இருந்து புறப்படும் இந்த பேருந்துகள் மாகும்புர - கோட்டை (Pettah)மற்றும் மாகும்புர - கடவத்த ஆகிய இரண்டு பிரதான பாதைகளில் இயங்கும். காலை மற்றும் மாலை வேளைகளில் 40 நிமிட இடைவெளியில் இந்த பேருந்து சேவைகள் இடம்பெறவுள்ளன.

விபரங்களுக்கு
இன்று முதல் புதிய பேருந்து சேவை
General20 April 2026

மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி

இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 30ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 99 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அஹ்மதாபாத்தில் நடைபெற்ற குறித்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதின. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 199 ஓட்டங்களைக் குவித்தது.   துடுப்பாட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் சார்பில் திலக் வர்மா அதிகபட்சமாக 101 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். இந்தநிலையில் 200 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 100 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியைத் தழுவியது.

விபரங்களுக்கு
மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி
General20 April 2026

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த ஜனாதிபதி அநுரகுமார சாதகமான பதில்: இந்தியத் துணை ஜனாதிபதி தகவல்

இலங்கையில் மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சாதகமான சமிக்ஞையை வெளிப்படுத்தியுள்ளதாக இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியத் துணை ஜனாதிபதிக்கும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போதே இந்தத் தகவல் பகிரப்பட்டது.இந்தக் கலந்துரையாடலின் போது, இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் புதுடில்லியின் நிலைப்பாடு உறுதியாக இருப்பதாகவும், அதில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் இந்தியத் துணை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். குறிப்பாக, மாகாண சபைத் தேர்தல்கள் நீண்டகாலமாகத் தாமதிக்கப்பட்டு வரும் சூழலில், அதனை விரைந்து நடத்துவது குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் தாம் ஆலோசனை நடத்தியதாகவும், அதற்கு ஜனாதிபதி சாதகமான பதிலளித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.இந்தச் சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் அதன் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் தருமலிங்கம் சித்தார்த்தன், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருடன் தமிழ்த் தேசியப் பேரவையின் சார்பில் செல்வராஜா கஜேந்திரனும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த ஜனாதிபதி அநுரகுமார சாதகமான பதில்: இந்தியத் துணை ஜனாதிபதி தகவல்
International News

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்

International 21 April 2026
தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்

இயேசு கிறிஸ்துவின் சிலை சேதமாக்கப்பட்டமைக்கு நெதன்யாகு கடும் கண்டனம்

International 20 April 2026
இயேசு கிறிஸ்துவின் சிலை சேதமாக்கப்பட்டமைக்கு நெதன்யாகு கடும் கண்டனம்

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் மாணவர்கள் போராட்டம்!

International 20 April 2026
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் மாணவர்கள் போராட்டம்!

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

International 18 April 2026
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

செவ்வாய் கிரகத்தில் உயிர் பிழைக்க முடியுமா? வியக்க வைக்கும் புதிய ஆய்வு!

International 16 April 2026
செவ்வாய் கிரகத்தில் உயிர் பிழைக்க முடியுமா? வியக்க வைக்கும் புதிய ஆய்வு!

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை? அடுத்தகட்ட நகர்வு குறித்து ஈரான் இன்று அறிவிக்கும்

International 16 April 2026
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை? அடுத்தகட்ட நகர்வு குறித்து ஈரான் இன்று அறிவிக்கும்

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை கூட்டம்: லெபனான் போர்நிறுத்தம் குறித்து ஆலோசனை

International 16 April 2026
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை கூட்டம்: லெபனான் போர்நிறுத்தம் குறித்து ஆலோசனை

ஈரானுடன் பேச்சு: அமெரிக்க வெள்ளை மாளிகையின் நம்பிக்கை

International 16 April 2026
ஈரானுடன் பேச்சு: அமெரிக்க வெள்ளை மாளிகையின் நம்பிக்கை

முதலிரவு அறையில் ரூ.90 லட்சம் கேட்டு மணமகள் ரகளை!

International 15 April 2026
முதலிரவு அறையில் ரூ.90 லட்சம் கேட்டு மணமகள் ரகளை!

அந்தாட்டிக்காவின் ‘ஆபத்தான வலயத்தில்’ புதிய தீவு கண்டுபிடிப்பு!

International 13 April 2026
அந்தாட்டிக்காவின் ‘ஆபத்தான வலயத்தில்’ புதிய தீவு கண்டுபிடிப்பு!

அமெரிக்காவின் முற்றுகை அறிவிப்புக்கு மத்தியில் ஹோர்முஸை கடந்த ஈரானிய கப்பல்கள்!

International 13 April 2026
அமெரிக்காவின் முற்றுகை அறிவிப்புக்கு மத்தியில் ஹோர்முஸை கடந்த ஈரானிய கப்பல்கள்!

மேத்யூ பெர்ரி மரண வழக்கு: 'கெட்டமைன் ராணிக்கு' 15 ஆண்டுகள் சிறை!

International 09 April 2026
மேத்யூ பெர்ரி மரண வழக்கு: 'கெட்டமைன் ராணிக்கு' 15 ஆண்டுகள் சிறை!

பக்தாத்தில் கடத்தப்பட்ட அமெரிக்க ஊடகவியலாளர் விடுதலை!

International 08 April 2026
பக்தாத்தில் கடத்தப்பட்ட அமெரிக்க ஊடகவியலாளர் விடுதலை!

சாத்தான்குளம் படுகொலை வழக்கு: 9 காவல்துறையினருக்கு மரண தண்டனை!

International 06 April 2026
சாத்தான்குளம் படுகொலை வழக்கு: 9 காவல்துறையினருக்கு மரண தண்டனை!

மத்தியஸ்தர்களின் போர் நிறுத்த முன்மொழிவுகளுக்கு ஈரானின் பதில் தயார்!

International 06 April 2026
மத்தியஸ்தர்களின் போர் நிறுத்த முன்மொழிவுகளுக்கு ஈரானின் பதில் தயார்!
Sports Stories
Explore More
தசுன் ஷானக்கவுக்கு பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் விளையாட ஓராண்டு தடை!

தசுன் ஷானக்கவுக்கு பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் விளையாட ஓராண்டு தடை!

லாகூர் கலாண்டர்ஸ் அணியுடனான ஒப்பந்தத்தை மீறி தொடரிலிருந்து விலகிய காரணத்திற்காக, 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பாகிஸ்தான் சுப்பர் லீக் (PSL) தொடரில் விளையாட இலங்கை இருபதுக்கு 20 கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் ஷானக்கவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தடை விதித்துள்ளது.இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிக்கையொன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.கடந்த மார்ச் மாதம் 21 ஆம் திகதியன்று தசுன் ஷானக்க ஒருதலைப்பட்சமாக தொடரிலிருந்து விலகியமை தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின் முடிவில், அவர் வீரர் பதிவு விதிமுறைகள் மற்றும் முத்தரப்பு ஒப்பந்தத்தை மீறியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்த சட்டதிட்டங்களுக்கு அப்பாற்பட்ட காரணங்களுக்காக அவர் தொடரிலிருந்து விலகியுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.குறித்த தொடரிலிருந்து விலகிய மறுநாள் இந்தியன் பிரீமியர் லீக்கில், உபாதைக்கு உள்ளான சாம் கரனுக்குப் பதிலாக ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியால் அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.இந்தநிலையில், பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் நேர்மை மற்றும் தொழில்முறைத் தரத்தைப் பேணும் நோக்கில், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தசுன் ஷானக்க 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில் பங்கேற்கத் தகுதியற்றவர் என அறிவிக்கப்பட்டுள்ளார்.இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாகத் தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ள தசுன் ஷானக்க, "தொடரிலிருந்து விலகிய தமது முடிவிற்காக பாகிஸ்தான் மக்களிடமும், ரசிகர்களிடமும் மனதார மன்னிப்புக் கேட்டுக்கொள்ளவதாகவும், தான் விலகிய நேரத்தில் வேறு எந்தத் தொடரிலும் இணையும் எண்ணம் எனக்கு இருக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன், லாகூர் கலாண்டர்ஸ் ரசிகர்களை ஏமாற்றியதற்காக வருந்துவதாகவும் எதிர்காலத்தில் மீண்டும் இந்த தொடரில் விளையாடுவேன் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையானது வீரர்களின் ஒப்பந்தங்களின் சட்டபூர்வ தன்மையை உறுதிப்படுத்துவதில் உறுதியாக இருப்பதாகவும், பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் தரத்தை நிலைநாட்ட இத்தகைய நடவடிக்கைகள் அவசியம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

விபரங்களுக்கு
மலிங்கவின் மிரட்டல் பந்துவீச்சு; அபிஷேக் அதிரடி: சென்னையை வீழ்த்தியது ஹைதராபாத்!

மலிங்கவின் மிரட்டல் பந்துவீச்சு; அபிஷேக் அதிரடி: சென்னையை வீழ்த்தியது ஹைதராபாத்!

ஐபிஎல் தொடரில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் அணிக்கு அபிஷேக் சர்மா (22 பந்துகளில் 59 ஓட்டங்கள் ) மற்றும் ஹென்ரிச் கிளாசன் (39 பந்துகளில் 59 ஓட்டங்கள் ) ஆகியோர் அரைசதம் விளாசி வலுசேர்த்தனர். டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் கூட்டணி பவர்பிளேயில் 75  ஓட்டங்களைக் குவித்தது. இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 194 ஓட்டங்களைப் பெற்றது. சென்னை தரப்பில் அன்ஷுல் கம்போஜ் 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 195 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பயணித்த சென்னை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் 7 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இம்பாக்ட் பிளேயராக வந்த ஆயுஷ் மத்ரே 13 பந்துகளில் 30 ஓட்டங்களைப் பெற்று நம்பிக்கையளித்தாலும், கிளாசனின் அபார பிடியினால் அவர் ஆட்டமிழந்தார். மேத்யூ ஷார்ட் மற்றும் சர்பராஸ் கான் ஆகியோர் போராடிய போதிலும், மிடில் ஓவர்களில் விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்ந்ததால் சென்னை அணியால் இலக்கை எட்ட முடியவில்லை. 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி தோல்வியைத் தழுவியது. இலங்கை வேகப்பந்து வீச்சாளர் ஈஷான் மலிங்க 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சென்னையின் வெற்றி வாய்ப்பைத் தடுத்தார். அவருக்குப் பக்கபலமாக நிதீஷ் குமார் ரெட்டி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் சென்னை அணி, உபாதை காரணமாக இன்னும் களமிறங்காத அதிரடி ஜாம்பவான் எம்.எஸ். தோனியின் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறது. அன்றைய தினம் நடைபெற்ற மற்றொரு போட்டியில், டேவிட் மில்லரின் அதிரடியால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியைத் தோற்கடித்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றி பெற்றது.

விபரங்களுக்கு
ஐபிஎல் 2026 : இன்றைய இரட்டை மோதல்கள்

ஐபிஎல் 2026 : இன்றைய இரட்டை மோதல்கள்

இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடரில் இன்று (19) இரண்டு விறுவிறுப்பான போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் கொல்கத்தா, ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் மோதுகின்றன. இன்றைய முதலாவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் (RR) ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஈடன்கார்டனில் நடைபெறவுள்ள குறித்த போட்டி இன்று பிற்பகல் 3.30க்கு ஆரம்பமாகவுள்ளது. இன்றிரவு நடைபெறவுள்ள இரண்டாவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) மற்றும் லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) ஆகிய அணிகள் மோதவுள்ளன. நியூ சண்டிகர் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள இந்த போட்டி இன்றிரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது. தொடரின் புள்ளிப்பட்டியலில் முன்னிலை பெறுவதற்கு இந்த நான்கு அணிகளுமே இன்றைய போட்டியில் வெற்றிபெற மல்லுக்கட்டும் என்பதால், இன்றைய ஆட்டங்கள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

விபரங்களுக்கு
புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்குமா பெங்களூரு? இன்று டபுள் ஹெடர் கொண்டாட்டம்

புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்குமா பெங்களூரு? இன்று டபுள் ஹெடர் கொண்டாட்டம்

2026 இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 26ஆவது மற்றும் 27ஆவது போட்டிகள் இன்று(18) நடைபெறவுள்ளன. அதன்படி ரோயல் செலன்ஜர்ஸ் பெங்களூரு அணியும் டெல்லி கெப்பிடல்ஸ் அணியும் பலபரீட்சை நடத்தவுள்ளன. குறித்த 3.30-க்கு பெங்களுருவில் நடைபெறவுள்ளது. இதுவேளை சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் இன்று இரவு 7.30க்கு ஹைதரபாத்தில் பலபரீட்சை நடத்தவுள்ளன. அதன்படி இதுவரை முடிவடைந்த போட்டிகளின் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் கிங்ஸ் அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று முதலாவது இடத்திலும் பெங்களூரு அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது. மூன்றாவது இடத்தில் ராஜஸ்தான் அணியும் நான்காவது இடத்தில் குஜராத் அணியும் உள்ளது.

விபரங்களுக்கு
ஸ்ரேயாஸ் ஐயரின் அபாரமான பிடியை வியந்து பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்

ஸ்ரேயாஸ் ஐயரின் அபாரமான பிடியை வியந்து பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணித் தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர் எல்லைக்கோட்டில் பிடித்த அற்புதமான பிடியெடுப்பு குறித்து, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது நெகிழ்ச்சியான பாராட்டுக்களைப் பகிர்ந்துள்ளார். மும்பை வான்கடே மைதானத்தில் நேற்றிரவு (16) நடைபெற்ற பரபரப்பான லீக் போட்டியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 196 ஓட்டங்களைப் பெற்றது. கடினமான இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணி, அதிரடியாகச் செயல்பட்டு 16.3 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 198 ஓட்டங்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. போட்டியின் 18-வது ஓவரின் போது மார்கோ யான்சென் வீசிய பந்தை, ஹர்திக் பாண்டியா சிக்ஸருக்கு விளாச முயன்றார். அப்போது எல்லைக்கோட்டில் நின்றிருந்த பஞ்சாப் அணித்தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர், பந்து எல்லைக்கோட்டைத் தாண்டுவதற்குள் இலாவகமாகத் தாவிப் பிடித்தார். தன்னால் நிலைகொள்ள முடியாது என்பதை உணர்ந்த அவர், எல்லைக்கோட்டைத் தாண்டும் ஒரு நொடிக்கு முன்பாக, பந்தை அருகில் நின்றிருந்த சேவியர் பார்ட்லெட்டிடம் வீசினார். பார்ட்லெட் அதனைச் சரியாகப் பிடித்து அவுட்டாக்கினார். இந்த அற்புதமான விழிப்புணர்வு குறித்து சச்சின் டெண்டுல்கர் தனது 'X' (முன்னர் ட்விட்டர்) தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: "ஸ்ரேயாஸ் பிடித்த இந்த பிடியெடுப்பு சிறப்பாக அமைந்ததற்கு அவரது உடற்தகுதி மட்டும் காரணமல்ல, அதிலிருந்த அபாரமான விழிப்புணர்வுதான் முக்கியமானது. பந்தின் வேகம், உயரம் மற்றும் எல்லைக்கோடு எங்குள்ளது என்பதைக் கணித்துச் செயல்பட்ட விதம் அற்புதம். பந்தைப் பிடிக்கும் அதே நொடியில், கால் தரையில் படுவதற்கு முன் அருகில் நின்ற வீரர் எங்கு இருக்கிறார் என்பதைக் கவனித்துச் சரியாக வீச வேண்டும். ஒரு நொடிப்பொழுதில் இவை அனைத்தையும் ஒருங்கிணைத்துச் செய்த அந்த நிதானம் வியக்கத்தக்கது. நான் நேரில் பார்த்ததிலேயே இது மிகச்சிறந்த பிடியெடுப்புக்களில் ஒன்று." இந்த சீசனின் மிகச்சிறந்த பிடியெடுப்பாக இது அமையும் எனப் பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்களும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். ஸ்ரேயாஸ் ஐயரின் இந்தச் செயல் பஞ்சாப் அணியின் வெற்றிக்குக் கூடுதல் பலம் சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
மும்பை அணியின் சரிவுக்கு இதுதான் காரணமா? முன்னாள் வீரர் ஆவேசம்

மும்பை அணியின் சரிவுக்கு இதுதான் காரணமா? முன்னாள் வீரர் ஆவேசம்

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி சந்தித்து வரும் தொடர் தோல்விகளை அடுத்து, அந்த அணியின் தலைவர் ஹர்திக் பாண்டியாவின் தலைமைத்துவம் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் ஒன்றில் மாத்திரம் வெற்றி பெற்றுள்ள மும்பை அணி, புள்ளிப்பட்டியலில் இறுதிக்கு முந்தைய இடத்தில் உள்ளது. நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக மும்பை அணி சந்தித்த தோல்வியானது, இம்முறை தொடரில் அந்த அணி பெற்ற 4ஆவது தோல்வியாகும்.இது குறித்து Cricbuzz தளத்தில் கருத்துத் தெரிவித்த இந்திய அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி, ஹர்திக் பாண்டியாவின் தலைமைத்துவம் பலவீனமாக உள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.2013 முதல் 2023 வரை ரோஹித் சர்மா மும்பை அணிக்கு 5 கிண்ணங்களைப் பெற்றுக்கொடுத்தார். அவரைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கியது ஒரு அநீதியாகும். தற்போதுள்ள நெருக்கடிக்கு தீர்வுகாண வேண்டுமாயின், ஹர்திக் பாண்டியா பதவியிலிருந்து விலகி மீண்டும் ரோஹித்திடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்" என அவர் தெரிவித்துள்ளார்.மேலும், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடி வீரர் ரூதர்ஃபோர்டிற்கு முன்னதாக ஹர்திக் பாண்டியா களம் இறங்கியது தவறான முடிவு. 12 பந்துகளில் 14 ஓட்டங்களை மாத்திரமே ஹர்திக் பெற்றார். அவருக்குப் பதிலாக ரூதர்ஃபோர்ட் ஆடியிருந்தால் அதிக ஆறு ஓட்டங்களை விளாசியிருப்பார் என திவாரி சுட்டிக்காட்டினார்.அத்துடன், ஜஸ்பிரித் பும்ராவிற்கு முதல் ஓவரை வழங்காமல் தீபக் சஹாருக்கு வழங்கியமை மற்றும் பும்ராவிற்கு இரண்டாவது ஓவரை வழங்கியமை போன்ற தந்திரோபாய முடிவுகளையும் அவர் விமர்சித்துள்ளார்.இதையும் பார்க்க..

விபரங்களுக்கு
நடப்பு ஐபிஎல் தொடரில் தடுமாறும் பும்ரா – காரணம் என்ன?

நடப்பு ஐபிஎல் தொடரில் தடுமாறும் பும்ரா – காரணம் என்ன?

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தொடர்ந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றத் தவறி வருகின்றமை இரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (16) வான்கடே மைதானத்தில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்கள் வீசிய பும்ரா, விக்கெட் எதனையும் வீழ்த்தாமல் 41 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். இம்முறை தொடரில் அவர் விளையாடிய 5 போட்டிகளிலும் ஒரு விக்கெட்டைக்கூட வீழ்த்தவில்லை என்பதுடன், அவரது ஓட்ட வீதமும் (Economy rate) 8.63 ஆக உயர்ந்துள்ளது.பும்ராவின் இந்த பின்னடைவு குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தனது யூடியூப் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். இம்முறை பும்ராவின் சராசரி பந்துவீச்சு வேகம் 130 கி.மீ ஆகக் குறைந்துள்ளது. அவர் வீசும் பந்துகளில் சுமார் 44 சதவீதமானவை மெதுவான பந்துகளாக (Slower balls) உள்ளன. அதாவது, ஒவ்வொரு இரண்டாவது பந்தும் மெதுவான பந்தாகவே வீசப்படுகிறது.பும்ரா மெதுவான பந்துகளை வீசுவதைக் குறைத்து, தனது வேகத்தை அதிகரிக்க வேண்டும். வேகம் குறைந்த பந்துகளின் சதவீதத்தை 30-35 ஆகக் குறைத்தால் மட்டுமே அவரது பந்துவீச்சு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்" என பதான் சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும், பும்ராவிற்குப் பயிற்சிகள் தேவையில்லை, ஆனால் புள்ளிவிபரங்களின்படி அவர் தனது வேகத்தை மீண்டும் மீட்டெடுக்க வேண்டியது அவசியம் என அவர் மேலும் தெரிவித்தார்.பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் மும்பை அணி நிர்ணயித்த 196 ஓட்டங்கள் என்ற இலக்கை, பஞ்சாப் அணி 16.3 ஓவர்களிலேயே கடந்து வெற்றி பெற்றது. பிரப்சிம்ரன் சிங் அதிரடியாக 80 ஓட்டங்களையும், அணித்தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர் 66 ஓட்டங்களையும் பெற்றனர்.இந்தத் தோல்வியுடன் மும்பை இந்தியன்ஸ் அணி நடப்புத் தொடரில் தனது 4ஆவது தொடர்ச்சியான தோல்வியைப் பதிவு செய்துள்ளதுடன், புள்ளிப் பட்டியலில் பின்னடைவைச் சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதையும் பார்க்க..

விபரங்களுக்கு
புள்ளிப்பட்டியலை மாற்றியமைக்குமா இன்றைய போட்டி? குஜராத் vs கொல்கத்தா இன்று நேருக்கு நேர்!

புள்ளிப்பட்டியலை மாற்றியமைக்குமா இன்றைய போட்டி? குஜராத் vs கொல்கத்தா இன்று நேருக்கு நேர்!

2026 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் 25 ஆவது போட்டி இன்று (17) நடைபெறவுள்ளது. குறித்த தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப் பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி இன்று இரவு 7.30க்கு அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை நடைபெற்ற 4 போட்டிகளில் 2 போட்டியில் வெற்றி பெற்று குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் 6 ஆவது இடத்தில் உள்ளது. இதுவரை எந்த போட்டிகளிலும் வெற்றி பெறாமல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 10ஆவது இடத்தில் உள்ளது. இன்று நடைபெறவுள்ள போட்டி இரு அணிகளும் ஒரு சவாலான போட்டியாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
Business Stories
Explore More
 ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

நாட்டில் உயர் ரக மோட்டார் வாகன விநியோக நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற TVS Lanka (Pvt) Ltd, இலங்கை மக்களுக்கு ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நம்பிக்கையான புதிய சகாப்தொன்றுக்கு வழிவகுத்துள்ளது. அந்த வகையில், புத்தம் புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்களை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளமை குறித்து சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.உலகளவில் அங்கீகாரம் பெற்ற TVS Sport 110 மோட்டார் வாகனத்தின் புதிய வடிவமைப்புப்பானது பிரயாணத் துறையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் ஆற்றல் மிக்கது. ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நவீன வடிவமைப்புடன் மேம்பட்ட செயல்திறனுடன் இலங்கையின் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்காக சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. 'மைலேஜ் கிங்' (Mileage King) என பிரபலமாக அறியப்படுகின்ற TVS Sport 110, எரிபொருள் பாவனையில் சிக்கனம் கொண்ட 109.7cc Duralife இயந்திரத்தைக் கொண்டது. 100cc இயந்திர வலுப் பிரிவில் TVS Motor நிறுவனத்தின் காப்புரிமை பெற்ற ET-Fi (Eco-Thrust Fuel Injection) தொழில்நுட்பத்தைக் கொண்ட முதலாவது மற்றும் ஒரேயொரு மோட்டார் சைக்கிள் இது மாத்திரமே என்பது சிறப்பம்சம். இந்த மேம்பாடானது எரிபொருள் பாவனையின் சிக்கனத்தை 15% ஆல் அதிகரிக்கச் செய்துள்ளதுடன், லிட்டருக்கு 80 கிமீ என்ற ஒப்பற்ற மைலேஜ் பாவனைக்கும் வழிவகுத்துள்ளது. சீரான இயந்திர வலுவைக் கொண்டுள்ளதுடன், நீண்ட நேரம் அணைத்து வைக்கப்பட்ட இயந்திரத்தை சிறப்பாக மீண்டும் இயக்கும் இயல்பானது.புத்தாக்கமிக்க பக்கவாட்டு ஸ்டாண்ட் குறியீடு, பக்கவாட்டு ஸ்டாண்ட் போடப்படும் போது தானாகவே அணைந்து விடும் இயந்திரம் ஆகிய தொழில்நுட்பங்களை இப்புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் கொண்டுள்ளன. பிரேக்குகளைப் பிரயோகிக்கும் போது உறுதிப்பாட்டை மேம்படுத்துவதற்கு 'synchronised braking technology' (SBT) என்ற தொழில்நுட்பத்தையும் அது கொண்டுள்ளது. பின்புறத்தில் சீர் செய்யக்கூடிய ஐந்து படிப்புக்கொண்ட hydraulic shock absorber மற்றும் சோர்வில்லாத நீண்டதூரப் பயணத்திற்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஆசனங்கள் ஆகிய சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது.“இலங்கையில் மோட்டார் சைக்கிள் பிரயாணிகள் இரண்டு அடிப்படை விடயங்களுக்கு தற்போது முன்னுரிமையளித்து வருகின்றனர். மிக நீண்ட கால உழைப்பு மற்றும் உச்ச எரிபொருள் சிக்கனம் ஆகியவற்றுக்கு அவர்கள் முதலிடம் அளிக்கின்றனர். TVS Sport 110 மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தி அவர்களின் எதிர்பார்ப்புக்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். இதை வெறுமனே ஒரு வாகனம் என்று கூறிவிடுவதன் நின்று விட முடியாது. எரிபொருள் செலவுகள் அதிகரித்துச் செல்லும் நிலையில், தரம் மற்றும் அழகிய தோற்றம் ஆகியவற்றிற்கு எவ்விதமான குறைவுமின்றி தமது பிரயாணங்களை மேற்கொள்ள விரும்புகின்ற கடின உழைப்பாளிகள் மற்றும் அன்றாடம் பிரயாணிப்பவர்களுக்கான உகந்த தீர்வாக இது காணப்படுகின்றது.” என்று TVS Lanka (Pvt) Ltd நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. கீதால் அந்தனி அவர்கள் கருத்து தெரிவித்தார்.அதிநவீன தோற்றத்தைக் கொண்டுள்ள TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் உயர்ரக 3D chrome இலச்சினைகள், பளபளப்பான தோற்றத்தைக் கொண்ட LED DRL விளக்குகள், மற்றும் புதுப்பிக்கப்பட்ட டிஜிட்டல்-அனலொக் கட்டுப்பாட்டு முகத்திரை போன்ற சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது. இலங்கையின் பல்வேறுபட்ட வீதி அமைப்புக்களுக்கு உகந்ததாக தரைக்கும், மோட்டார் சைக்கிளின் அடிப்பாகத்திற்கும் இடையில் 175 மிமீ தாராள இடைவெளியையும் கொண்டுள்ளது.கருப்பு நியோன் மற்றும் பழுப்பு சிவப்பு உள்ளிட்ட பல்வேறு வர்ணங்களில் TVS Sport 110 மோட்டார் சைக்கிள் வெளிவருவதுடன், TVS Lanka நாடளாவிய ரீதியில் கொண்டுள்ள பரந்தளவிலான வலையமைப்பினூடாக கிடைக்கப்பெறுகின்றது.“மிகச் சிறந்த வாகனத்தை வழங்குவதற்கும் அப்பால், சந்தையில் மிகக் குறைந்த தொகையில் அதனை சொந்தமாக்கிக் கொள்ள உறுதி செய்வதிலும் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம். உதிரிப்பாகங்களை இலகுவில் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக நாடெங்கிலும் 400 க்கும் மேற்பட்ட வலையமைப்பு மையங்களை நாம் நிறுவியுள்ளோம். அவற்றினூடாக சந்தையில் அசல் உதிரிப்பாகங்களை மிகவும் சிக்கனமாக ஆகக் குறைந்த விலைகளில் நாம் வழங்குகின்றோம். உதிரிப்பாகங்கள் 100% கிடைப்பதை TVS Lanka உறுதிப்படுத்துவதுடன், அசல் பாகங்கள் அனைத்திற்கும் முழுமையான உத்தரவாதத்தையும் வழங்குகின்றது. எம்மிடம் மோட்டார் சைக்கிள்களை வாங்குபவர்கள் முழுமையான மன நிம்மதியுடன், தங்குதடையின்றி போக்குவரத்து செய்வதை நாம் உறுதி செய்கின்றோம்,” என்று TVS Lanka நிறுவனத்தின் சந்தைப்படுத்தலுக்கு பின்னரான செயல்பாடுகளுக்கான உதவிப் பொது மேலாளர் இந்திக புஷ்பகுமார அவர்கள் கருத்து தெரிவித்தார்.ஐந்து ஆண்டுகள் அல்லது 76,000 கிமீ என்ற முழுமையான உத்தரவாதம், உதிரிப்பாகங்களை குறைந்த விலைகளில் தங்குதடையின்றி பெற்றுக்கொள்ளல், மற்றும் விற்பனைக்குப் பின்னரான சேவைகளை வழங்குவதற்கான பிரத்தியேக அணி ஆகியவற்றின் பக்கபலத்துடன், மோட்டார் சைக்கிள் துறையில் வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்துவதில் சிறந்த தரத்தரங்களை TVS Lanka நிறுவனம் தொடர்ந்தும் நிலைநாட்டி வருகின்றது.உங்களுக்கு அருகாமையிலுள்ள TVS காட்சி அறைக்கு வருகை தந்தோ அல்லது www.tvslanka.lk என்ற இணையத்தளம் மூலமாகவோ, அல்லது 0114 600 500 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தியோ மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள முடியும்.TVS Lanka (Pvt) Ltd நிறுவனம் தொடர்பான விபரங்கள்இந்தியாவைத் தளமாகக் கொண்ட TV Sundram Iyengar and Sons (Pvt) Ltd நிறுவனத்தின் முழுமையான உரிமையாண்மையின் கீழ் ஒரு துணை நிறுவனமாக TVS Lanka (Pvt) Ltd இயங்கி வருகிறது. இரு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையில் மோட்டார் வாகனத் துறையில் நம்பிக்கைக்குரிய நாமமாக விளங்குகின்றது. புத்தாக்கம் மற்றும் மகத்துவம் ஆகியவற்றுக்கு இது பெயர்பெற்றுள்ளதுடன், தனது வரலாற்றில் பல அங்கீகாரங்களையும், பாராட்டுக்களையும் அது சம்பாதித்துள்ளது. TVS வர்த்தகநாமம் மற்றும் பல்வேறுபட்ட வர்த்தகநாமங்களின் UCAP சேவைகளுக்கான பிரத்தியேக சேவை மையங்களை TVS Lanka இயக்கி வருகின்றது. நாடெங்கிலும் 2,000 க்கும் மேற்பட்ட முகவர் மையங்களுடன், நாடளவில் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியான தரம் மற்றும் இலகுவாக கிடைக்கப்பெறுதல் ஆகியவற்றை TVS Lanka உறுதி செய்து வருகின்றது.

விபரங்களுக்கு
டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் குரூப் ஒஃப் கம்பனிஸ் நிறுவனத்தின் மின்சார வாகனப் பிரிவான டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவேட்) லிமிடெட், Bajaj Chetak ஸ்கூட்டரை பெருமையுடன் மீள அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.    இதன் மூலம் இலங்கையின் மிகவும் பிரபலமான ஸ்கூட்டர் வர்த்தக நாமங்களில் ஒன்றான Chetak, மின்சார யுகத்திற்கு ஏற்றவாறு புதிய பரிமாணத்தில் மீண்டும் களமிறங்கியுள்ளது.    1978 ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட Bajaj Chetak, மிக விரைவாக இல்லங்கள் தோறும் இடம்பிடித்த ஒரு பெயராக மாறியதுடன், நாடு முழுவதும் உள்ள பல தலைமுறை பயணிகளின் நம்பிக்கையையும் வென்றெடுத்தது.    ஜப்பானிய மோட்டார் சைக்கிள்கள் ஆதிக்கம் செலுத்திய காலப்பகுதியிலும் கூட, Chetak ஸ்கூட்டர்களுக்கான கேள்வி அதிகரித்துக் காணப்பட்டது.    இது இலங்கை நுகர்வோர் மத்தியில் காணப்பட்ட ஈடிணையற்ற நம்பகத்தன்மையையும் உணர்வுப்பூர்வமான பிணைப்பையும் உறுதிப்படுத்துகிறது.    47 ஆண்டுகால புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்ட Chetak, தற்போது அதே நம்பிக்கையுடனும் நீடித்து உழைக்கும் தன்மையுடனும் நவீன மின்சார தொழில்நுட்பத்தின் மேம்பட்ட வசதிகளுடன் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.    நவீன நகரப் போக்குவரத்துக்காக வடிவமைக்கப்பட்டுள்ள Bajaj Chetak Electric Scooter, 3.1 kW hub motor மற்றும் 3.5 kWh lithium-ion பற்றரியைக் கொண்டுள்ளது.    இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 151 கி.மீ (IDC range) வரை பயணிக்கக்கூடிய சிறப்பான செயல்திறனை வழங்குகிறது.    அத்துடன், மணித்தியாலத்திற்கு 63 கி.மீ வேகத்தில் பயணிக்கக்கூடிய இந்த ஸ்கூட்டர், ஆற்றல், வினைத்திறன் மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கான வசதி ஆகியவற்றுக்கிடையே ஒரு சிறந்த சமநிலையை வழங்குகிறது.    வலுவான Steel Unibody கட்டமைப்பைக் கொண்டுள்ள Chetak, உயர்தரமான பயண அனுபவத்தையும் நீண்டகால நீடித்து உழைக்கும் தன்மையையும் வழங்குவதன் மூலம் தனது பிரிவில் உள்ள ஏனைய வாகனங்களிலிருந்து தனித்து நிற்கிறது.    அத்துடன், தனது பிரிவிலேயே ஆகக்கூடிய அளவான 35 லீற்றர் Under-seat storage வசதியையும் கொண்டுள்ளமையால், அன்றாடப் பயணம் மற்றும் நவீன நகர வாழ்க்கை முறைக்கு இது ஒரு மிகச்சிறந்த தெரிவாக அமைகிறது.    சந்தையில் உள்ள ஏனைய போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில், Bajaj Chetak அதிக ஆற்றலையும், சிறந்த பயணத் தூரத்தையும் வழங்குகிறது.    இந்த ஸ்கூட்டர், முழுமையான Digital display, புளூடூத் ஊடாக இணைக்கப்படக்கூடிய App connectivity, Eco மற்றும் Sports ஆகிய இரண்டு Riding modes போன்ற பல நவீன வசதிகளைக் கொண்டுள்ளது.    அத்துடன், Hill Hold Assist, Reverse mode, Music and call notifications போன்ற வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதால், இது ஒரு சௌகரியமான மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பயண அனுபவத்தை உறுதி செய்கிறது.    இந்த அறிமுகத்திற்கு முன்னதாகவே, விற்பனை, சேவை மற்றும் உதிரிப்பாகங்கள் விநியோகம் ஆகியவற்றை உள்ளடக்கிய சுமார் 2,000 நாடளாவிய விற்பனை மற்றும் சேவை நிலையங்களில், பரிசோதனை உபகரணங்கள், கண்டறியும் ஸ்கானர்கள், பயிற்சி பெற்ற சேவை நிபுணர்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட பிரத்தியேக வசதிகளை DPMC நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.    இதன் மூலம், வாடிக்கையாளர்கள் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அவர்களுக்கு ஈடிணையற்ற ஆதரவையும் இலகுவான அணுகலையும் வழங்குவதை நிறுவனம் உறுதி செய்கிறது.    டேவிட் பீரிஸ் E-Mobility நிறுவனமானது, Bajaj Chetak ஸ்கூட்டரின் தரம், நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் செயல்திறன் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்காக, இலங்கையின் அனைத்து வகையான நிலப்பரப்புகளிலும் 20,000 கிலோமீற்றர்களுக்கும் அதிகமான தூரம் சோதனைகளை மேற்கொண்டுள்ளது.    இந்த வெற்றிகரமான களப்பரிசோதனைகளின் பின்னரே இலங்கைச் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.    டேவிட் பீரிஸ் குழுமத்தின் விரிவான நாடளாவிய விற்பனைக்குப் பிந்தைய சேவை வலையமைப்பானது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மேலும் பலப்படுத்துவதுடன், நம்பகத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் நலன் மீதான அக்குழுமத்தின் நீண்டகால அர்ப்பணிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.    அத்துடன், Bajaj Chetak பயனர்களுக்கு இலங்கையின் முதலாவது இரு சக்கர வாகனங்களுக்காக வழங்கப்படும் 24/7 வீதியோர அவசர உதவிச் சேவை வழங்கப்படுவதால், எவ்வித கவலையுமின்றி மனநிம்மதியுடன் பயணிக்க முடியும்.    வாடிக்கையாளர் டேவிட் பீரிஸ் E-Mobility ஐ 011 470 0550எனும் ஹொட்லைன் ஊடாக தொடர்பு கொள்ள முடியும்.    24/7 வீதியோர அவசர உதவிச் சேவையை 011 4 700 551 ஊடாக பெற முடியும்.    Chetak காட்சியறை இல. 08, பன்னிபிட்டிய வீதி, பத்தரமுல்ல எனும் முகவரியில் அமைந்துள்ளது.    Bajaj Chetak அறிமுகத்துடன், டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவட்) லிமிடெட், இலங்கையை நிலைபேறான மற்றும் முன்னணி மின்சார போக்குவரத்து முறைமைக்கு கொண்டு செல்லும் செயற்பாடுகளை துரிதப்படுத்துவதுடன், பல தலைமுறைகளின் விருப்பத்திற்குரிய தெரிவை, எதிர்காலத்திற்கு பொருத்தமான வகையில் கொண்டு வந்துள்ளது.

விபரங்களுக்கு
தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

சியபத பினான்ஸ் தடையற்ற தலைமைத்துவ மாற்றத்தை அறிவித்துள்ளது.    தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம் பெற்றதுடன் ஆனந்த செனவிரத்ன நிர்வாக இயக்குநராக தனது பதவிக் காலத்தை நிறைவு செய்கிறார்.    2026 ஜனவரி 1, முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமிக்கப்பட்டுள்ளார்.    இந்த நியமனம் சியபதவின் உள்ளக திறமை மேம்பாட்டிற்கான உறுதிப்பாட்டில் ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது.    நிறுவனத்தின் முன்னோடி உறுப்பினரான ஹேவவிதாரன, 2005 இல் சந்தைப்படுத்தல் உத்தியோகத்தராக நிறுவனத்தில் சேர்ந்தார்.    20 ஆண்டுகளுக்கும் மேலாக, அவர் பதவிகளில் உயர்ந்து, 2021 முதல் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி ஆகவும், 2025 முதல் தலைமை மூலோபாய அதிகாரி ஆகவும் பணியாற்றினார்.    ஆனந்த செனவிரத்னவின் வெளிச்செல்லும் தலைமையின் கீழ், சியபத பைனான்ஸ் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் துறையில் ஒரு சக்திவாய்ந்த நிறுவனமாக மாறியது.    சியபத பினானஸ் பிஎல்சி என்பது இலங்கை மத்திய வங்கியால் ஒழுங்குபடுத்தப்படும் உரிமம் பெற்ற ஒரு முன்னணி நிதி நிறுவனமாகும், மேலும் இது சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழுமையான துணை நிறுவனமாகும்.    இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்த நிறுவனம், குத்தகை, தங்கக் கடன்கள், தரகு, வணிகக் கடன்கள் மற்றும் நிலையான வைப்புத்தொகைகள் உள்ளிட்ட பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகிறது.    சமீபத்தில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான தொழில்தருநர் வர்த்தக விருதுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக “சிறந்த தொழில்தருநர் வர்த்தக முத்திரை” என்ற பட்டத்தைப் பெற்றுள்ளது.    இந்த விருது, தொழில்தருநர் வர்த்தக முத்திரையிடலில் நிறுவனத்தின் சிறந்த நடைமுறைகள் மற்றும் புதுமையான உத்திகளை அங்கீகரிக்கிறது, இது ஊழியர் ஈடுபாடு, தக்கவைத்தல் மற்றும் ஊக்கமளிக்கும் பணியிட கலாசாரத்தை உருவாக்குவதற்கான அதன் வலுவான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

விபரங்களுக்கு
நிக்கவெரட்டியவில் தடம் பதிக்கின்றது சியபத பினான்ஸ்

நிக்கவெரட்டியவில் தடம் பதிக்கின்றது சியபத பினான்ஸ்

உள்நாட்டு நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, இலங்கை முழுவதும் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான நிதி தீர்வுகளை வழங்குவதற்காக நிறுவனத்தின் பரந்த விரிவாக்கல் முயற்சிகளுக்கு மேலும் ஒரு மைல்கல்லாக வெற்றிகரமாக சமீபத்தில் தனது 61வது கிளையை நிக்கவெரட்டியவில் திறந்து வைத்துள்ளது.புதிய கிளையை சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன திறந்து வைத்தார். தலைமை நிர்வாக அதிகாரி (நியமிக்கப்பட்ட) மதிஷ ஹேவாவிதாரண, சிரேஷ்ட நிர்வாகத்தினர், காவல்துறை அதிகாரி ஹரிசன் சோமசிறி, கிராம சேவையாளர் எச்.எம்.டி. நாமல் பண்டார ஆகியோர் அரச மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்புறுதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் முன்னிலையில் இந்த கிளை திறந்து வைக்கப்பட்டது.வளமான மண் மற்றும் பயிர் செய்கைக்கு ஏற்ற அமைவான நிலங்களைக் கொண்ட நிக்கவரெட்டி, அதன் விவசாய பாரம்பரியம் மற்றும் அதன் முக்கியத்துவத்திற்காக புகழ் பெற்றுள்ளது, அங்குள்ள சமூகம் இன்றுவரை தனித்துவமான விவசாய நுட்பங்களை ஒருங்கிணைப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்துகின்றனர்.பாரம்பரியமாகவும் வரலாற்று ரீதியாகவும் விவசாயத்திற்குப் பெயர் பெற்றிருந்தாலும், நிக்கவரெட்டி அதன் பொருளாதார அடித்தளத்தை பாரம்பரியமற்ற தொழில்துறைகளிலும் பன்முகப்படுத்தியுள்ளது. தற்போது, ​​வேலைவாய்ப்பு நிலப்பரப்பில் சேவைத் துறைஇ விவசாயம் மற்றும் தொழில்துறை துறைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. சில தசாப்தங்களாக, நிக்கவெரட்டிய ரியல் எஸ்டேட் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டது. மேம்பட்ட உட்கட்டமைப்பு வசதி மற்றும் முதலீடுகளுக்கான மேம்பட்ட காலநிலை ஆகியவற்றால் ஆதரிக்கப்படும் பிராந்தியத்தின் நிலைப்பாடு - நவீன வீட்டுவசதி திட்டங்களின் அதிகரிப்புக்கும் வணிக வளாகங்களின் கிடைக்கும் தன்மைக்கும் வழி வகுத்துள்ளது.சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன கருத்து தெரிவிக்கையில் "சியபத பினான்ஸ் எங்களுக்கு மிக உயர்ந்த திருப்தி அளிக்கும் அம்சம் என்னவெனில், நாங்கள் சென்றடையும் மக்களின் வாழ்க்கையில் எங்கள் சேவைகள் ஏற்படுத்தும் நல்விளைவுகளை காண்பதாகும்," எனவும் மேலும் கூறுகையில் "நிக்கவெரட்டிய கிளை திறப்பு நெருங்கும் போது, ​​உள்;ர் சமூகம் புதிய வழிகளுக்கு திறந்திருப்பதையும் நாங்கள் அவதானித்தோம். உதாரணமாக, டிஜிட்டல் சேவைகளில் இளைஞர்கள் வளர்ந்து வருவதையும், கைத்தறி கைவினைகளில் ஈடுபடும் பெண்கள் மற்றும் ஒட்டுமொத்த விவசாயத் தொழிலும் படிப்படியாக இயற்கை விவசாய நடைமுறைகளை ஏற்றுக்கொள்வதையும் நாங்கள் கவனித்தோம். இத்தகைய பின்னணியில், இந்த சமூகம் வெற்றிக்கான அடித்தளத்தை உருவாக்க உதவுவதற்கு எங்கள் ஆதரவு அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம்.” எனக் கூறினார்.குத்தகை, நிலையான வைப்புத்தொகை, தங்கக் கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு மற்றும் தரகு முதல் "ஸ்மார்ட் பே" - அதன் பில் செலுத்தும் வசதி வரை விரிவான தயாரிப்பு தொகுதியினை பெருமைப்படுத்துகிறோம், புதிய கிளை, தொழில்முனைவோர், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஆர்வமுள்ள இளைஞர்கள் வளர்ச்சி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும், நீண்ட காலத்திற்கு அறிவார்ந்த நிதி தீர்மானங்களை ஊக்குவிக்க உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைத் தொடர்ந்து, ஒரு சிறிய திறப்பு விழா நடத்தப்பட்டது, மேலும் பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் மற்றும் காலுறைகள் கொள்வனவு செய்வதற்கு பரிசு வவுச்சர்களை நன்கொடையாக வழங்குவதற்காக பணம் ஒதுக்கப்பட்டது.பரிசு வவுச்சர்களை சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர். ஆனந்த செனவிரத்ன, தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் சிரேஷ்ட நிர்வாகத்தினர் திரு. மதிஷ ஹேவாவிதாரண ஆகியோர், பிரதேச செயலகப் பிரிவு மற்றும் நிக்கவெரட்டிய கிராம சேவையாளரின் ஒத்துழைப்புடன், திறப்பு விழாவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பாடசாலை பிள்ளைகளுக்கு வழங்கினர்.சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழு உரிமம் பெற்ற துணை நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, நாடு முழுவதும் கிளைகளின் வலையமைப்பை கொண்டுள்ளது, இது அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்கல் தரங்களை வழங்குவதை உறுதி செய்கிறது. ஃபிட்ச் மதிப்பீடுகளால் நிலையான செயற்பாடுகள் மூலம் A(lka) என்ற தேசிய நீண்டகால மதிப்பீட்டை நிறுவனம் பெற்றுள்ளது, இது உறுதியான நிதி நிலை மற்றும் நம்பிக்கைக்குரிய வளர்ச்சி பாதையை பிரதிபலிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் முயற்சிகளின் வளர்ச்சிக்கும், நாடு முழுவதும் தனிப்பட்ட நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் பங்களித்துள்ளது.037 4658105 ஐ அழைப்பினை மேற்கொள்வதன் மூலமோ அல்லது இல. 48 E, ஹீலோகம, நிக்கவெட்டிய என்ற முகவரியில் உள்ள கிளைக்கு விஜயம் செய்வதன் மூலமோ நிக்கவெட்டிய கிளையை தொடர்பு கொள்ளுங்கள். சியபத பினான்ஸ் பிஎல்சி மற்றும் அதன் சேவைகள் பற்றிய மேலதிக தகவலுக்கு, www.siyapatha.lk ஐ பார்வையிடவும்.

விபரங்களுக்கு
வடக்கில் வலையமைப்பை விரிவுபடுத்திய சியபத பினான்ஸ்

வடக்கில் வலையமைப்பை விரிவுபடுத்திய சியபத பினான்ஸ்

சியபத பினான்ஸ், மன்னாரில் புதிய கிளையுடன் வடக்கில் தனது வலையமைப்பை விரிவுபடுத்துகிறது    20 வருட அனுபவமுள்ள முன்னணி நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, சமீபத்தில் தனது 58ஆவது கிளையை மன்னார் நகரில் திறந்து வைத்தது.    இது வட மாகாணத்தில் தனது வலையமைப்பை வலுப்படுத்தி, நாடு தழுவிய கிளை வலையமைப்பை விரிவுபடுத்துகிறது.    மன்னார் கிளை திறப்பு விழாவில் சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் ஆனந்த செனவிரத்ன, தலைமை செயற்பாட்டு அதிகாரி மதிஷ ஹேவாரத்ன மற்றும் சிரேஷ்ட நிர்வாகம், கிராம சேவையாளர் என்டனி மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.    இலங்கையின் வடக்கு கடற்கரைப் பகுதியில் பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியம், தனித்துவமான கட்டிடக்கலை மற்றும் கண்கவர் அழகினை பாதுகாத்து வரும் மன்னார் மாவட்டம், பிரதான நிலப்பகுதி மற்றும் மன்னார் தீவை கொண்டுள்ளது.    15-64 வயதுக்குட்பட்ட பொருளாதார ரீதியாக சுறுசுறுப்பான வயதுக் குழுவிற்குள் வகைப்படுத்தப்பட்டுள்ள மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர், நீண்டகாலத்தில் பிராந்தியத்தின் நிலையான வளர்ச்சிக்கு பங்களிக்கும் நெகிழ்வான மற்றும் வசதியான நிதி தீர்வுகளுக்கான கட்டாய தேவை ஒன்றினை கொண்டுள்ளதாக சியபத பினான்ஸ் அடையாளம் காட்டுகிறது.    மன்னார் நகரம் , பசுமையான காடுகள், பனை மரங்கள், சதுப்பு நிலங்கள் மற்றும் தென்னை பயிர்ச்செய்கை முதல் தரிசு நிலம் மற்றும் தடாகங்கள் வரை பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளைக் கொண்ட வறண்ட, மணல் தீபகற்பமாகும். தொழிற்துறையில் குறிப்பிடத்தக்க 53 சதவீதத்தை கொண்ட விவசாயத் துறை, பிராந்தியத்தின் பொருளாதார நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்துகிறது அங்கு பெரும்பாலான உள்ளூர்வாசிகள் நெல் விளைச்சலை தங்கள் முக்கிய வருமான ஆதாரமாக கொண்டுள்ளனர்.    மன்னாரில் உள்ள பல மீன்பிடி கிராமங்களின் வாழ்வாதாரத்திலும் மீன்பிடித் தொழில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.    நிகழ்வில் உரையாற்றிய சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் ஆனந்த செனவிரத்ன, 'துடிப்பான மன்னார் நகரில் எங்கள் புதிய கிளையை திறப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் - ஏராளமான வாய்ப்புகள் மற்றும் நம்பிக்கைக்குரிய எதிர்காலம் கொண்ட ஒரு பிராந்தியம்.    எங்கள் சேவைகள் மூலம், உள்ளூர் சமூகங்களை மேம்படுத்துவதையும், உலகின் மாறிவரும் காலத்திற்கு ஏற்ப அவர்களின் வாழ்க்கையை மாற்ற உதவுவதையும் நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம். இதை கருத்தில் கொண்டு, நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் சென்றடைந்து, பல்வேறு தனிநபர் குழுக்களுடன் இணைந்து பணியாற்றும் எங்கள் பயணத்தைத் தொடர நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.' எனக் கூறினார்.    சமீபத்திய ஆண்டுகளில், மன்னார் காற்று மற்றும் சூரிய சக்தி போன்ற வளங்களால் இயக்கப்படும் புதுப்பிக்கத்தக்க சக்திக்கான பரந்த ஆற்றலைக் காட்டியுள்ளது, இது உள்ளூர் பொருளாதாரங்களுக்கு புதிய வழிகளை வழங்குகிறது. பிராந்தியத்தில் உள்ள உயர்ந்த இலட்சியம் உள்ள தனிநபர்களுக்கும் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் நம்பகமான நிதி ஆலோசகராக கவர்ச்சிகரமானதாக இருக்கும் இந்த புதிய கிளை, குத்தகை, நிலையான வைப்புத்தொகை, தங்கக் கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு மற்றும் தரகு அதன் கொடுப்பனவு செலுத்தும் வசதியான ஸ்மார்ட் பே வரை பரந்த தயாரிப்பு தொகுப்பினை வழங்குகிறது.    நிறுவனத்தின் 'சியபதேன் மிஹின்கதட்ட' சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்திற்கு இணங்க, சியபத பினான்ஸ் பிஎல்சியின் சிரேஷ்ட நிர்வாகத்தினர் சென்.லூசியா மகா வித்தியாலயத்தில் ஒரு சிறப்பு மரம் நடும் முயற்சியை மேற்கொண்டனர் மற்றும் மன்னாரில் உள்ள பாடசாலை மாணவர்களின் டிஜிட்டல் கல்வியின் வளர்ச்சியை ஆதரிக்கும் முயற்சியாக கணினிகள் மற்றும் துணைக்கருவிகளை நன்கொடையாக வழங்கினர்.

விபரங்களுக்கு
டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ், GWM ஆகியன இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டம்

டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ், GWM ஆகியன இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டம்

டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் மற்றும் GWM ஆகியவை இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த மூலோபாய கூட்டாண்மையை உருவாக்குகின்றன.    டேவிட் பீரிஸ் குழுமத்தின் நான்கு சக்கர வாகன விற்பனைப் பிரிவான டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் (பிரைவேட்) லிமிடெட் (DPA), உலகளாவிய வாகனத் துறையில் முதன்மை வகிக்கும்  GWM உடன் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டாண்மையை அறிவித்துள்ளது.    இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய ஆற்றல் வாகனங்களின் (NEVs) புதிய அத்தியாயத்தை அறிமுகப்படுத்துவது இந்தக் கூட்டாண்மையின் நோக்கமாகும்.     அதிகாரப்பூர்வ பத்திரிகையாளர் சந்திப்பு, அக்டோபர் 30 அன்று டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் (DPA) தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் டேவிட் பீரிஸ் குழுமத்தின் மூத்த உறுப்பினர்களான குழுமத் தலைவர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் ரோஹன திஸாநாயக்க மற்றும் டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மகேஷ் மற்றும் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் தலைவர் யசந்த அபேகோன், ஆகியோர் கலந்து கொண்டனர். GWM நிறுவனத்தின் பிரதிநிதிகள் இணைய வழியில் நிகழ்வில் இணைந்துகொண்டனர்.    இந்தக் கூட்டாண்மை, புத்தாக்கம், நம்பகத்தன்மை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் மூலம் நாட்டின் போக்குவரத்துத் துறையின் நிலப்பரப்பை மறுவடிவமைப்பதை நோக்கமாகக் கொண்டது. உலகளாவிய முன்னணி நிறுவனம், தேசத்தின் முன்னணி நிறுவனத்துடன் இணைகிறது.    இந்தப் புதிய கூட்டாண்மை, உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கும் GWM-இன் உலகளாவிய பொறியியல் சிறப்பையும், நான்கு தசாப்தங்களுக்கும் மேலான டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் (DPA)-இன் நம்பகத்தன்மை மற்றும் எளிமையான அணுகல் கொண்ட பாரம்பரியத்தையும் ஒருங்கிணைக்கிறது.      இந்த ஒத்துழைப்பின் மூலம் இலங்கையில் உள்ள வாடிக்கையாளர்கள்  இனிமேல் நவீன தொழில்நுட்பம் மற்றும் அன்றாடப் பயன்பாட்டிற்கு ஏற்ற தன்மைகொண்ட ஹைப்ரிட், பிளக்-இன் ஹைப்ரிட் மற்றும் முழு மின்சார வாகனங்களை பெற்றுக்கொள்ள முடியும்.  அவுஸ்திரேலியாவில் ஹவல் H6 ரக வாகனங்களுக்கு வழங்கப்பட்ட 5-நட்சத்திர ANCAP பாதுகாப்புத் தரச் சான்றிதழின் உறுதியுடனும், உலகின் சவாலான சந்தைகளில் கிடைத்த அனுபவத்துடனும், GWM நிறுவனம் இலங்கைச் சாலைகளுக்குச் சிறந்த செயல்திறனையும், மன அமைதியையும் கொண்டு வருகிறது.    "Go With More" என்ற GWM-இன் உலகளாவிய பிராண்ட் தத்துவத்தின் கீழ் இந்த முயற்சி, இலங்கையில் உள்ள ஓட்டுனர்களுக்கு செயல்திறன் மற்றும் எரிபொருள் திறன் ஆகிய இரண்டிற்கும் இடையே தேர்வு செய்ய வேண்டிய நிலையை நீக்கியுள்ளதுடன் புத்திசாலித்தனமான, ஒன்றிணைக்கப்பட்ட மற்றும் அதிக நம்பிக்கையான எதிர்காலத்திற்கு அழைப்பு விடுக்கிறது.     GWM ஹைப்ரிட் ரக வாகனங்களின் அறிமுகம் டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் (DPA) மற்றும் GWM ஆகிய நிறுவனங்களின் கூட்டாண்மையின் கீழ் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்படும் வாகனங்கள்:     1. ஹவல் H6 HEV / PHEV- ரூ. 17.995 மில்லியன் (HEV)/ரூ. 20.995 மில்லியன்(PHEV)    அதிநவீன மற்றும் புத்திசாலித்தனமான SUV: நகர்ப்புற சொகுசையும், ஹைப்ரிட் வாகனத்தின் பன்முகத்தன்மையையும் இணைக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.சக்தி வாய்ந்த, அதேநேரம் எரிபொருள் சிக்கனமான ஓட்டத்தை வழங்குகிறது. இதில், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் 12.3 அங்குல அல்ட்ரா-ஸ்மார்ட் தொடுதிரை ஆகியவை கூடுதல் அம்சங்கள்.இது குறிப்பிடத்தக்க தூய மின்சாரப் பயண வரம்பை வழங்குகிறது. இதன்மூலம், உண்மையான ஹைப்ரிட் சுதந்திரத்தையும் தினசரி பயணங்களுக்கு மிகவும் குறைவான எரிபொருள் செலவையும் பெறலாம்.    2. ஹவல் GT பிளக்-இன் ஹைப்ரிட் (PHEV)-ரூ. 24.995 மில்லியன்    இது ஒரு செயல்திறன் மிக்க பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி ஆகும். இதன் தோற்றம், தைரியமான வடிவமைப்பு மற்றும் துடிப்பான ஹைப்ரிட் சக்தி ஆகிய அம்சங்கள் தனித்துவமானவை. இது ஒரு ஸ்போர்ட்ஸ் காருக்கு நிகரான வேகத்தை வழங்குகிறது. அதாவது, வெறும் 4.9 வினாடிகளில் 0 முதல் 100 கி.மீ/மணி வேகத்தை எட்டும். அத்துடன், பிரம்மாண்டமான 762 Nm முறுக்குவிசை (torque) திறனையும் கொண்டுள்ளது. இதன் விளையாட்டுத்தனமான வெளிப்புற வடிவமைப்புக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஓட்டுநரை மையப்படுத்தி உட்புரமும்  வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், 'Alcantara-style' பாணியிலான ஸ்போர்ட் இருக்கைகள் மற்றும் ஆக்ரோஷமான வெளிப்புற வடிவமைப்பு ஆகியவை அடங்கும்.     3.டேங்க் 300 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் (HEV)-ரூ. 35.995 மில்லியன்    நகரத்தைத் தாண்டி சுதந்திரத்தை நாடும் சாகச விரும்பிகளுக்காக உருவாக்கப்பட்ட, உறுதியான ஆஃப்-ரோட் வாகனம் இது. டேங்க் 300 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனம் (HEV) அதன் முழு 4x4 ஆஃப்-ரோட் சேசிஸ், முன் மற்றும் பின் டிஃபரன்சியல் லாக்குகள் மற்றும் Crawl Control வசதி ஆகியவற்றின் மூலம் நவீன தேடல் அனுபவத்தை மறுவடிவமைக்கிறது. இதன் ராணுவத் தர வலிமை, இரட்டை 12.3-இன்ச் திரைகள் மற்றும் உயர்தர faux Nappa leather accents உட்புற அலங்காரம் போன்ற சொகுசான அம்சங்களால் சமநிலைப்படுத்தப்பட்டுள்ளது.   4. டேங்க் 500 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனம் (HEV)- ரூ. 43.5 மில்லியன்    GWM-இன் முதன்மை ரக வாகனமான இந்த வாகனம் கம்பீரமான வடிவமைப்பு, ஏழு இருக்கைகள் கொண்ட வசதி மற்றும் ஹைப்ரிட்இன் சொகுசுத்தன்மை  ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. 'Nappa Leather-Accented' இருக்கைகள் (குளிரூட்டும்/மசாஜ் வசதியுடன்) மற்றும் பிரமாண்டமான 14.6-அங்குல மைய மல்டிமீடியா திரையுடன் இதன் உள்ளறை ஆடம்பரமாக அமைக்கப்பட்டுள்ளது. பாடி-ஆன்-ஃப்ரேம் சேசிஸ் (Body-on-Frame chassis: வாகனத்தின் உடல், அதன் சட்டகத்தின் மேல் பொருத்தப்பட்டிருக்கும்) அடிப்படையில் இது கட்டமைக்கப்பட்டுள்ளது. இது நிகரற்ற கம்பீரமான தோற்றத்தையும், உண்மையான ஆஃப்-ரோட் திறனையும் வழங்குகிறது. இது ஒவ்வொரு வருகையையும் ஒரு சிறப்பு நிகழ்வாக மாற்றுகிறது.    மேலதிகமாக, நிலைத்தன்மை மற்றும் அதிக செயல்திறன் கொண்ட போக்குவரத்து தீர்வுகளை நாடும் இலங்கை நுகர்வோருக்கான வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில், DPA நிறுவனம் முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் ORA ரக வாகனங்களையும் அறிமுகப்படுத்த உள்ளது.    புத்தாக்கம் மூலம் இலங்கையின் எதிர்கால போக்குவரத்து துறையை மறுவடிவமைத்தல். புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இலங்கையின் வாகன துறையின்  எதிர்காலத்திற்கான ஒரு மூலோபாய நகர்வாக இந்தக் கூட்டாண்மை அமைகிறது.    GWM-இன் நவீன ஹைப்ரிட் மற்றும் மின்சார தொழில்நுட்பங்கள், DPA-இன் வலுவான நாடு தழுவிய சேவை வலையமைப்புடன் இணைந்து இலங்கை மக்களுக்கு அதிக சுதந்திரத்தையும், சிறந்த செயல்திறனையும், சிறந்த மதிப்பையும், அதிக நம்பிக்கையையும் வழங்குகின்றன.    நிகழ்வில் உரையாற்றிய DPA-இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. மகேஷ், மேலும் கூறியதாவது: "GWM-இன் வாகனங்கள் உலகத் தரம், நம்பிக்கை மற்றும் புதுமையின் அடையாளமாகத் திகழ்கின்றன. டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸின் நம்பகத்தன்மை மற்றும் இணையற்ற சேவையுடன் ஹைப்ரிட் செயல்திறனை அனுபவிக்கும் சுதந்திரத்தை இலங்கை மக்களுக்கு நாங்கள் வழங்குகிறோம்.   " GWM x DPA - GO WITH MORE. GWM மற்றும் DPA-வின் இந்தக் கூட்டாண்மை, வெறும் வாகனங்களை அறிமுகப்படுத்துவதைவிட மேலானதாகும். இது செயல்திறன், நிலைத்தன்மை மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவற்றைச் சமநிலைப்படுத்தும் ஒரு புத்திசாலித்தனமான அதிகாரத்தை போக்குவரத்து துறையில்  தொடங்கி வைக்கிறது.    GWM-இன் உலகத் தரப் புதுமை மற்றும் DPA-இன் உள்ளூர் அனுபவம் ஆகியவை கைகோர்ப்பதால், ஒவ்வொரு GWM வாகன உரிமையாளருக்கும் DPA-வின் நான்கு தசாப்த கால நாடு தழுவிய சேவை, முழுமையான உத்தரவாதம் மற்றும் தடையற்ற உதிரிப்பாக விநியோகம் ஆகியவற்றினை பெறமுடியும். இலங்கை மக்களுக்கு இது ஒரு புதிய ஓட்டுநர் அனுபவத்தைத் தொடக்கி  வைக்கிறது.    இந்த அனுபவத்தில், தொழில்நுட்பம் உங்கள் உணர்வுகளுக்கு உற்சாகமளிக்கிறது, விரிவான தேர்வு உங்களுக்கு தன்னம்பிக்கையைத் தருகிறது, மற்றும் எதிர்வரும் பாதை அதிக சுதந்திரத்திற்கும் , உறுதியான நம்பிக்கைக்கும்  உத்தரவாதம் அளிக்கிறது.  

விபரங்களுக்கு
 வெற்றி பெற்ற மாணவர்களுக்காக கொழும்பில் பிரம்மாண்ட பாராட்டு விழா நடத்திய கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ

வெற்றி பெற்ற மாணவர்களுக்காக கொழும்பில் பிரம்மாண்ட பாராட்டு விழா நடத்திய கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ

இலங்கையில் மிக பிரசித்தமான புலமைப் பரிசில் ஆசிரியர்களில் ஒருவரான கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோவினால் (Hayeshika Fernando), இம்முறை புலமைப் பரிசில் பரீட்சையில் திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்று Monarch Imperial Hotel வளாகத்தில், கடந்த 20ம் திகதி நடைபெற்றது. Queens Education Campus நிறுவனத்தினால் நடத்தப்பட்ட இந்த நிகழ்வு நான்காவது முறையாகவும் நடந்துள்ளது.கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ, இன்றளவில் இலங்கையில் மிகப் பிரசித்தமான, மதிப்பிற்குரிய ஒரு டியூஷன் ஆசிரியர் ஆவார். அவ்வாறு ஆவதற்கான காரணம், அவர் மாணவர்கள் மீது வைத்திருக்கும் அளவு கடந்த அன்பு தான். அதனால் தான் இன்று அவரை 'டீச்சர் அம்மா' என்ற brand name அவரது வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்கள் மத்தியில் பாவிக்கப்படுகிறது.இம்முறை இந்த கௌரவிப்பு விழா இரண்டு பகுதிகளாக நடந்த அதே வேளை, புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற 6,000க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு மாணவருக்கும் பரிசில்கள், சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டன.சமுகமளித்திருந்த ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான சிறுவர்கள் மற்றும் பெற்றோர் கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ ஆசிரியருடன் உரையாடியமை மட்டுமல்லாமல், புகைப்படங்களும் பெற்றுக் கொண்டனர். மேலும், சிறு சிறுவரகள் அவரைக் கட்டியணைத்து கொண்டமை உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் காட்சியாயிற்று.அதே போல, அன்பான பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் ஒரு நன்றிக்கடனாக, ஏற்கனவே செய்யப்பட்டது போலவே இம்முறையும் வானிலிருந்து பொழிய வைக்கப்பட்ட "அன்பின் பூ மழை" அனைவரது அன்பையும், பாராட்டையும் பெற்றுக் கொண்டது.

விபரங்களுக்கு
பெரிய வெங்காயக் கொள்முதல் திட்டம் ஆரம்பம்: கிலோவுக்கு 130 ரூபா நிர்ணயம்

பெரிய வெங்காயக் கொள்முதல் திட்டம் ஆரம்பம்: கிலோவுக்கு 130 ரூபா நிர்ணயம்

தற்போது பாரிய வெங்காயக் கொள்முதல் திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.இது குறித்துத் தகவல் வெளியிட்டுள்ள பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் 130 ரூபா என்ற விலை அடிப்படையில் கொள்முதல் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.இந்தக் கொள்முதல் நடவடிக்கைகள் சதொச, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மற்றும் தெரிவு செய்யப்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தற்போது, தம்புள்ளை, கலாவெவ, பக்கமூன, நாவுல, சிகிரியா மற்றும் கல்கிரியாகம உள்ளிட்ட பல பகுதிகளில் பெரிய வெங்காய அறுவடைகள் இடம்பெற்று வருகின்றன.இதற்கிடையே, நேற்று பக்கமூன நகரில் பெரிய வெங்காய விவசாயிகள் குழுவொன்று தமது உற்பத்திக்கு நியாயமான விலையைக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.சந்தையில் தற்போது வழங்கப்படும் விலைகள் தமது உற்பத்திச் செலவைக் கூட ஈடுசெய்யவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

விபரங்களுக்கு
Entertainment Stories
Explore More
ஜாதி, மத அடையாளங்களைத் துறக்கும் பார்த்திபன்: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஜாதி, மத அடையாளங்களைத் துறக்கும் பார்த்திபன்: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழ் சினிமாவின் தனித்துவமான கலைஞரான நடிகர் பார்த்திபனுக்கு, அவர் கோரியபடி 'ஜாதி - மதம்' அற்றவர் என்பதற்கான சான்றிதழை ஒரு வார காலத்திற்குள் வழங்குமாறு சோழிங்கநல்லூர் வட்டாட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தனது மனுவில் பல முக்கிய காரணங்களை அடுக்கியுள்ள பார்த்திபன், 1958 ஆம் ஆண்டு பிறந்த தனக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லை என்றும், பாடசாலை கல்வியை முடித்த பின்னர் அது தொடர்பான ஆவணங்களைப் பெறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.தன்னிடம் ஜாதி அல்லது மதத்தை உறுதிப்படுத்தும் எந்தவொரு கல்விச் சான்றிதழோ அல்லது பிற ஆவணங்களோ தற்போது இல்லை என்பதை அவர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.தேச ஒற்றுமைக்கு ஜாதி, மதம் மற்றும் மொழி ரீதியிலான பிளவுகள் பெரும் தடையாக இருப்பதாகக் கருதும் பார்த்திபன், சமூகத்தில் ஒரு நல்மாற்றத்தை ஏற்படுத்தவும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழவும் இந்தச் சான்றிதழைக் கோரியுள்ளார். இது தொடர்பாக வேளச்சேரி வட்டாட்சியரிடம் அவர் அளித்த விண்ணப்பம், பின்னர் சோழிங்கநல்லூர் வட்டாட்சியருக்கு மாற்றப்பட்டிருந்தது. (வட்டாட்சியர் என்பது இலங்கையின் பிரதேச செயலாளருக்கு நிகரான பதவி)இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் பார்த்திபனின் கோரிக்கையை ஏற்று, ஒரு வார காலத்திற்குள் அவருக்கு 'ஜாதி - மதம்' அற்றவர் என்ற சான்றிதழை வழங்க அரச அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

விபரங்களுக்கு
கோலியின் அந்த ஒரு 'லைக்' - ஜெர்மன் அழகி கொடுத்த அதிரடி விளக்கம்

கோலியின் அந்த ஒரு 'லைக்' - ஜெர்மன் அழகி கொடுத்த அதிரடி விளக்கம்

இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி, இன்ஸ்டாகிராமில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இன்ஃப்ளூயன்ஸர் லிஸ்லாஸ் (Lislass) என்பவரின் புகைப்படத்தை 'லைக்' செய்ததாக சமூக வலைதளங்களில் பெரும் விவாதம் கிளம்பியது. இது குறித்து லிஸ்லாஸ் தனது விளக்கத்தை அளித்துள்ளார். அவர் கூறுகையில், "விராட் கோலி எனது புகைப்படத்தை 'லைக்' செய்தது ஏன் இவ்வளவு பெரிய செய்தியானது என எனக்குத் தெரியவில்லை. அவருக்காக நான் வருத்தப்படுகிறேன். நான் ஒரு தீவிர ஆர்சிபி (RCB) இரசிகை; எனது புகைப்படத்தை அவர் லைக் செய்தது எனக்கு மகிழ்ச்சிதான்," என்று தெரிவித்துள்ளார். ஒரு சிறிய சமூக ஊடகச் செயல் மிகப்பெரிய சர்ச்சையாக மாற்றப்பட்டதற்கு அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளாதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபரங்களுக்கு
யுவன் ஷங்கர் ராஜாவின் இரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி - இதோ மாஸ் அப்டேட்!

யுவன் ஷங்கர் ராஜாவின் இரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி - இதோ மாஸ் அப்டேட்!

மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான ஜோஜு ஜார்ஜ் (Joju George) முதன்முறையாக இயக்குநராக அவதரிக்கும் 'பரிபாடி' (Paripadi) திரைப்படத்தின் மூலம், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மலையாள சினிமாவில் காலடி எடுத்து வைக்கிறார். ஏற்கனவே தமிழ்த் திரையுலகில் பல சாதனைகளைப் படைத்துள்ள யுவன், தற்போது அண்டை மாநிலமான கேரளாவிலும் தனது இசைப் பயணத்தைத் தொடங்கவுள்ளது அவரது இரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திரைப்படத்தை வேணு குன்னாப்பில்லி (Venu Kunnappilly) தயாரிக்கிறார். இப்படத்திற்குப் ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார். 'பரிபாடி' படத்தின் முதல் தோற்றப் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ள நிலையில், யுவனின் பின்னணி இசை மலையாளத் திரைப்படங்களுக்கு ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விபரங்களுக்கு
துரந்தருக்கு பதிலடியாக எடுக்கப்பட்ட தொலைக்காட்ச்சி தொடர்... டெல்லிக்கு பதில் மும்பை - பாகிஸ்தான் கொடுக்கும் பதிலடியா?

துரந்தருக்கு பதிலடியாக எடுக்கப்பட்ட தொலைக்காட்ச்சி தொடர்... டெல்லிக்கு பதில் மும்பை - பாகிஸ்தான் கொடுக்கும் பதிலடியா?

பொலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்சய் கண்ணா, சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியான படம் 'துரந்தர்'. இத்திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.1,350 கோடிக்கும் மேல் வசூலித்து மெகா ஹிட் ஆனது. அதனை தொடர்ந்து, துரந்தர் படத்தின் 2 ஆம் பாகமாக 'துரந்தர் தி ரிவெஞ்ச்' திரைப்படம் கடந்த மாதம் 19 ஆம் திகதி வெளியானது.இந்த படத்திற்கும் ரசிகர்களிடையே அபாரமான வரவேற்பு கிடைத்தது. இந்த படம் இதுவரை சுமார் ரூ.1,800 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. பாகிஸ்தானில் செயல்படும் இந்திய உளவாளியின் விறுவிறுப்பான கதையை மையமாகக் கொண்டு துரந்தர் படம் உருவாக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் நிகழ்ந்த பல்வேறு பயங்கரவாத தாக்குதல்கள், குறிப்பாக நாடாளுமன்ற தாக்குதல், மும்பை தாக்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளின் உண்மைக் காட்சிகளும் படத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. அதோடு பா.ஜ.க. அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் திட்டம் முறியடிக்கப்பட்டதாக துரந்தர் படத்தில் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்திய அரசியல் மற்றும் பாகிஸ்தான் அரசியல் பற்றி உண்மை சம்பவங்களுடன் கற்பனை கலந்து துரந்தர் படத்தில் பல காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், துரந்தர் படத்திற்கு பதிலடியாக பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட ‘ஜஹன்னும் பராஸ்டா ஜன்னத்’ என்ற தொலைக்காட்ச்சி தொடர் ஒன்று தற்போது இணையத்தில் இந்தியர்களால் டிரோல் செய்யப்பட்டு வருகிறது.அந்த பாகிஸ்தான் தொடர் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, அதில் டெல்லிக்கு பதிலாக மும்பை நகர்ப்பகுதி காட்டப்படுகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய உளவு அமைப்புகள் சதித்திட்டம் தீட்டுவது போல் அதில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அந்த தொடரில் நடித்துள்ள நடிகர்கள் இந்தி மொழியுடன் உருது மொழியை கலந்து பேசுவதாகவும், இதுதான் துரந்தர் படத்திற்கு பாகிஸ்தான் கொடுக்கும் பதிலடியா? என்றும் கேட்டு இணையவாசிகள் கலாய்த்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபரங்களுக்கு
வில்லனாக மாறும் அயர்ன் மேன்! - இரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

வில்லனாக மாறும் அயர்ன் மேன்! - இரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

சினிமாகான் நிகழ்வின் இறுதி நாளன்று டிஸ்னி நிறுவனம், இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த 'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' (Avengers: Doomsday) படத்தின் முதல் அதிகாரப்பூர்வ முன்னோட்டத்தை வெளியிட்டது. இதில் அயர்ன் மேன் பாத்திரத்தில் நடித்த ராபர்ட் டவுனி ஜூனியர், 'டாக்டர் டூம்' எனும் வில்லன் பாத்திரத்தில் தோன்றுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்படம் எதிர்வரும் டிசம்பர் 18ஆம் திகதி வெளியாகவுள்ளது. இதே நாளில் டெனிஸ் வில்லெனுவ் இயக்கத்தில் 'டியூன்: பார்ட் 3' (Dune: Part III) திரைப்படமும் வெளியாகவுள்ளதால், வசூல் ரீதியாகப் பெரிய போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கிறிஸ்டோபர் நோலன் தனது அடுத்த படைப்பான 'தி ஒடிஸி' (The Odyssey) படத்தின் முக்கிய காட்சிகளைத் திரையிட்டார். இதில் மாட் டாமன், டாம் ஹாலண்ட் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். டாம் குரூஸின் 'டொப் கன் 3' (Top Gun 3) தயாரிப்புப் பணிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளன. ஏஐ (AI)(செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பம் மூலம் மறைந்த நடிகர் வால் கில்மரை 'அஸ் டீப் அஸ் தி கிரேவ்' (As Deep As The Grave) படத்தில் மீண்டும் கொண்டு வந்துள்ளது ஹாலிவுட் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேம்ஸ் பாண்ட் படத்தின் அடுத்த நாயகன் குறித்து இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும் என்று அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் தெரிவித்துள்ளதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது.

விபரங்களுக்கு
ஜனநாயகனை தொடர்ந்து இணையத்தில் கசிந்த

ஜனநாயகனை தொடர்ந்து இணையத்தில் கசிந்த "ஜெயிலர்- 2"

விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பல திரைப்பிரபலங்கள் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் இதுவரை 9 பேர் கைதாகியுள்ளனர்.இந்த நிலையில் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி உள்ள ‘ஜெயிலர்-2’ படத்தின் காட்சிகளும் சமூக வலை தளங்களில் கசிந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ‘ஜெயிலர்-2’ படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் கசிந்துள்ளன. உடனடியாக செயல்பட்ட படக்குழு குறித்த காட்சிகளை உடனடியாக இணையத்தளங்களில் இருந்து நீக்கியுள்ளனர். இந்த காணொளிகளை பகிர்வதிலோ விளம்பரப்படுத்துவதிலோ ஈடுபட்டுள்ள கணக்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது உள்பட அத்தகைய உள்ளடக்கத்தை அகற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபரங்களுக்கு
ஜனநாயகன்’ படம் கசிந்தது எப்படி? காவல்துறை அதிரடி விளக்கம்

ஜனநாயகன்’ படம் கசிந்தது எப்படி? காவல்துறை அதிரடி விளக்கம்

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியான விவகாரத்தில், முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் காவல்துறை விளக்கமளித்துள்ளது.இந்த திரைப்படம் இணையத்தில் கசிந்தமை தொடர்பாக கடந்த 11 ஆம் திகதி பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். ஏற்கனவே ஆறு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூன்று முக்கிய சந்தேகநபர்களை தமிழ்நாடு இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.படம் கசிந்தது எப்படி? - அதிர்ச்சித் தகவல்காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையின்படி, கைது செய்யப்பட்டவர்களில் முதன்மை சந்தேகநபர் ஒரு சுயாதீன உதவி படத்தொகுப்பாளராக பணியாற்றியவர் என்பது தெரியவந்துள்ளது. அவர் வேறொரு திரைப்படத்திற்காக படத்தொகுப்பு கூடத்தில் பணியாற்றியபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தரவுகளை அனுமதியின்றி திருடிச் சென்றுள்ளதுடன், அவ்வாறு திருடப்பட்ட தரவுகளே இணையத்தில் சட்டவிரோதமாகப் பகிரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.இந்த திரைப்படம் விஜய் நடிக்கும் கடைசிப் படம் என குறிப்பிடப்படுவதால், பெரும் எதிர்பார்ப்பு நிலவிய சூழலில், தணிக்கை பிரச்சினைகளால் வெளியீடு தாமதமான நிலையில் இந்தக் கசிவு ஏற்பட்டுள்ளது.சட்டவிரோதமாக இணையத்தில் கசிந்துள்ள படத்தைப் பதிவிறக்கம் செய்யவோ, பகிரவோ அல்லது ஒளிபரப்பவோ வேண்டாம் என்று காவல்துறை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. இத்தகைய சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவது கடுமையான சட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விபரங்களுக்கு
ஜனநாயகன் திரைப்படக் கசிவு - முக்கிய சந்தேக நபர்கள் மூவர் கைது

ஜனநாயகன் திரைப்படக் கசிவு - முக்கிய சந்தேக நபர்கள் மூவர் கைது

நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் இணையதளங்களில் கசிந்த விவகாரம் தொடர்பாக, மூன்று முக்கிய சந்தேகநபர்களை சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.டிஜிட்டல் தடயங்கள் மற்றும் தீவிர விசாரணைகளின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வேறொரு திரைப்படத்தின் காணொளி செம்மைப்படுத்துனராக பணியாற்றும் ஒருவர், 'ஜனநாயகன்' படத்தின் படத்தொகுப்புபணிகள் நடைபெற்ற கலையகத்துக்குள் அத்துமீறி நுழைந்து படத்தை திருடியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இந்தத் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர்.திரைப்படம் வெளியாவதற்கு முன்பே முழு நீளப் படம் கசிந்தமை திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், காவல்துறையினரின் இந்த அதிரடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.இதையும் பார்க்க..

விபரங்களுக்கு
Hiru TV News | Programmes
/////////////////////////////////////////////// Commented on 2025-09-17 ////////////////////////////////////////////////////